ஐ.பி.எல் போட்டியை ஒளிபரப்ப தலிபான்கள் தடை!!

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் போட்டியை ஒளிபரப்ப தலிபான்கள் தடை!!

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் ரி-20 போட்டியை ஒளிபரப்பக் கூடாது என்று ஆப்கானிஸ்தான் உள்ள ஊடகங்களுக்கு தலிபான்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

பெண்கள் விளையாட்டு போட்டிகளை பார்ப்பதாலும், போட்டியின்போது ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்பக் கூடாது என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சியமைத்துள்ள தலிபான்கள் பெண்களுக்கான உரிமைகளை பறித்து வருகின்றனர். பெண்கள் விளையாட்டில் சேரக்கூடாது, பாடசாலைகளுக்கு செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஜக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரையும் ஒலிபரப்ப கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர். 

உற்சாகத்திலும், தங்களுடைய அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும் பெண்களும் ஆட்டம் போடுவார்கள். ஏற்கனவே பெண்களுக்கு எதிரான முடிவகளை எடுத்து வரும் தலிபான்கள், பெண்கள் போட்டியை பார்ப்பதாலும் ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஐ.பி.எல். போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என்று ஊடகங்களுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு