இமாலய சாதனையை நோக்கி ரோகித்!!

ஆசிரியர் - Editor II
இமாலய சாதனையை நோக்கி ரோகித்!!

மும்பை இந்தியன்ஸ் தலைவர் ரோகித் சர்மா இன்னும் 3 சிக்சர்கள் அடித்தால் ரி-20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைக்க உள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோகித் சர்மா சிக்ஸ் அடிப்பதில் வல்லவர். இந்நிலையில் அவர் ரி-20 கிரிக்கெட் இதுவரை 397 சிக்சர்கள் விளாசியுள்ளார். 

இன்று ஐ.பி.எல். போட்டிகள் தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 3 சிக்சர்கள் விளாசினால் ரி-20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு