அரசியல் பிரவேசம் குறித்து அதிரடி நடவடிக்கை எடுத்த தளபதி விஜய்!! -தந்தை, தாய் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு-

ஆசிரியர் - Editor II
அரசியல் பிரவேசம் குறித்து அதிரடி நடவடிக்கை எடுத்த தளபதி விஜய்!! -தந்தை, தாய் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு-

தளபதி விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேர் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு மத்தியில் ரசிகர் மன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து அரசியல் பிரவேசம் தொடர்பில் தளபதி விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய அவரது தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில், கட்சியை பதிவு செய்த தகவல் தவறானது என தளபதி விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தளபதி விஜய் வழக்கு தொடர்ந்தார்.

சி.ஜோசப் விஜய் என்ற பெயரில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளரான எஸ்.ஏ.சந்திரசேகர் (தந்தை), பொருளாளர் ஷோபா சேகர் (தாய்) உள்பட 11 பேர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி தொடரப்பட்ட இந்த வழக்கு ஓகஸ்டு 23 ஆம் திகதி விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு அறிவித்தல் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால் வழக்கு தொடர்ந்த தளபதி விஜய் தரப்பில் சட்டத்தரணி எவரும் ஆஜர் ஆகாததால், அந்த பதில் மனுக்களை அவர்களிடமே திருப்பி அளித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27 ஆம் திகதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு