நாளை ஆரம்பமாகிறது ஐ.பி.எல்!! -முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்-

ஆசிரியர் - Editor II
நாளை ஆரம்பமாகிறது ஐ.பி.எல்!! -முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதல்-

துபாயில் நாளை ஆரம்பமாகும் ஜ.பி.எல் 2 ஆவது கட்ட லீக்கின் 30 ஆவது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

14 வது ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகி மே 2 ஆம் திகதி 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

எஞ்சிய போட்டிகள் கொரோனா தொற்றால் இந்தியாவில் நடத்தப்படவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இந்தப் போட்டிகள் மாற்றப்பட்டது.

இந்த சீசனின் 2 ஆவது கட்ட ஆட்டங்கள் நாளை ஆரம்பமாகி ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. எஞ்சிய 27 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் ஆக மொத்தம் 31 ஆட்டங்கள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

துபாயில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30 ஆவது போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு