மைதானத்திற்குச் செல்ல வீரர்கள் மறுப்பு!! -பாகிஸ்தான் – நியூஸிலாந்து கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டது-

ஆசிரியர் - Editor II
மைதானத்திற்குச் செல்ல வீரர்கள் மறுப்பு!! -பாகிஸ்தான் – நியூஸிலாந்து கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டது-

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று வெள்ளிக்கிழமை 18 வருடங்களின் பின் நடைபெறவிருந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

குறித்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான், ராவல்பிண்டியில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவிருந்தது.

இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானத்துக்கு செல்ல நியூஸிலாந்து வீரர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, முழு தொடரும் ரத்து செய்யப்பட்டதுடன், நியூஸிலாந்து வீரர்கள் விரைவில் பாகிஸ்தானிலிருந்து வெளியேறுவர் என எதிபார்க்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு