யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக வீதியில் மயங்கி கிடந்தவர் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழப்பு! கொலை என கூறும் உறவினர்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக வீதியில் மயங்கி கிடந்தவர் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழப்பு! கொலை என கூறும் உறவினர்கள்..

யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் முன்பாக மயங்கி கிடந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறியிருக்கும் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த சம்பவத்தினால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் குழப்பமான நிலையேற்பட்டுள்ளது. 

பொலிஸ் நிலையத்திலிருந்து 50 மீற்றர் துாரத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்திருக்கின்றார்.

வீதியின் ஓரமாக ஒருவர் வீழ்ந்து கிடந்துள்ளார். அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்த்தபோது, 

உயிரிழந்துவிட்டார் என்று அறிக்கையிடப்பட்டது. சம்பவ இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் வீதியில் தரித்து நின்றுள்ளது. 

சம்பவ இடத்தில் திரண்ட உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். என்றும்,  இன்று நண்பகல் இடம்பெற்ற இறுதிக் கிரியை வீடொன்றில் 

சிலருடன் அவர் முரண்பட்டுக் கொண்டார் என்றும் அவர்களே கொலை செய்துள்ளனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

மோப்பநாயுடன் தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப விசாரணைகளின் பின்னரே காரணம் கண்டறிய முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு