யாழ்.கொடிகாமம் - கோயிலாமனை பகுதியில் விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட இளைஞனின் மரணத்தில் சந்தேகம்! கொலையா என்ற கோணத்தில் விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - கோயிலாமனை பகுதியில் விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட இளைஞனின் மரணத்தில் சந்தேகம்! கொலையா என்ற கோணத்தில் விசாரணை..

யாழ்.கொடிகாமம் - காரைக்காட்டு வீதியில் வீதி விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளைஞன் வீதி விபத்தில் இறக்கவில்லை. எனவும் அது திட்டமிட்ட கொலை என இளைஞனின் குடும்பத்தார் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 

கடந்த 14ம் திகதி இரவு கொடிகாமம் - கோயிலாமனை பகுதியை சேர்ந்த இ.நவர்ணன் (வயது24) என்ற இளைஞன் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

இந்நிலையில் இளைஞனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவருடைய பெற்றோார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனர். குறித்த விடயம் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட 

சாவகச்சோி நீதிவான் நீதிமன்ற நீதிவான் யாழ்ப்பாணத்தில் உள்ள மரண விசாரணை அதிகாரி ஊடாக மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு