மூன்றாவது ரி-20 போட்டி இன்று!!

ஆசிரியர் - Editor II
மூன்றாவது ரி-20 போட்டி இன்று!!

இலங்கை - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ரி-20 கிரிக்கெட் தொhடரின் 3 ஆவதும் இறுதியுமான போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்க அணி, இலங்கையுடன் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2:1 என்ற நிலையில் கைப்பற்றியது.

பின்னர் செப்டெம்பர் 10 அன்று ஆரம்பமான மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா 28 ஓட்டங்களுடன் வெற்றி பெற்றது.

செப்டெம்பர் 12 நடைபெற்ற 2 ஆவது ரி-20 போட்டியிலும் தென்னாபிரிக்கா, ஒன்பது விக்கெட் மற்றும் 35 பந்துகள் மீதமிருந்த நிலையில் அபாரமாக வெற்றி பெற்றிருந்தது. இதன்மூலம் ரி-20 தொடரை பறிகொடுத்தது இலங்கை.

இந் நிலையில் குறித்த இரு அணிகளுக்கிடையிலான ரி-20 தொடரின் 3 ஆவதும் இறுதியுமான போட்டி இன்று செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு