ஊரடங்கு மற்றும் சுகாதார நடைமுறைகள் அமுலில் உள்ள நிலையில் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெருமளவு மக்கள்! யாழ்.அச்சுவேலியில்..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு மற்றும் சுகாதார நடைமுறைகள் அமுலில் உள்ள நிலையில் மரண ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெருமளவு மக்கள்! யாழ்.அச்சுவேலியில்..

யாழ்.அச்சுவேலி - நாவற்காடு பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் மரண சடங்கில் சுகாதார நடைமுறைகளைகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஆகியவற்றை மீறி பெருமளவானோர் கலந்து கொண்டிருக்கின்றனர். 

அச்சுவேலி, நாவற்காட்டை சேர்ந்த தியாகராசா மதனபாலன் (வயது 40) என்பவர், உழவு இயந்தித்தின் மூலம் உழவில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த 2ஆம் திகதி மின்னல் தாக்கி உயிரிழந்தார். அவர் வடமராட்சி அல்வாயில் திருமணம் முடித்துள்ளார். 

அவரது இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்றது. அல்வாயில் சடலம் வைக்கப்பட்டு, அஞ்சலி செய்யப்பட்ட பின்னர், அச்சுவேலிக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதன்போது அவர் செலுத்திய இ.போ.ச பேருந்தும் இந்த ஊர்வலத்தில் சென்றது.

இந்நிலையில், குறித்த இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு