147 பூட்டப்பிள்ளைகள், 27 கொள்ளுப்பிள்ளைகள் கண்ட செல்லம்மா ஆச்சி 109 வயதில் மறைவு!

ஆசிரியர் - Admin
147 பூட்டப்பிள்ளைகள், 27 கொள்ளுப்பிள்ளைகள் கண்ட செல்லம்மா ஆச்சி 109 வயதில் மறைவு!

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வந்த செம்பக்குட்டி செல்லம்மா ( வயது 109) என்ற மூதாட்டி நேற்று இயற்கை எய்தியுள்ளார். 

1912 ஆம் ஆண்டு பிறந்த செல்லம்மா தனது 109 வயது வரை ஆரோக்கியமாகவே வசித்து வந்துள்ளார். 

இப்பிரதேசத்தில் அதிகூடிய வயதுடன் வாழ்ந்து வந்த செல்லம்மா ஆச்சிக்கு 12 பிள்ளைகள், 62 பேரப்பிள்ளைகள், 147 பூட்டப்பிள்ளைகள், 27 கொள்ளுப்பிள்ளைகள் உள்ளனர். இவர் மூன்று நேரமும் தவறாது , தேவார, திருவாசகங்களை ஓதுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு