யாழ்.மாவட்டத்தில் மோசமாகும் நிலைமை! மேலும் 8 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மோசமாகும் நிலைமை! மேலும் 8 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா தொற்றுடன் குழந்தை பிரசவித்து 

10 நாள்களின் பின்னர் உயிரிழந்தார் என கூறப்படுகின்றது. மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொக்குவிலைச் சேர்ந்த 39 வயதுடைய பெண், 

இருபாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண், கொக்குவிலைச் சேர்ந்த 75 வயதுடைய பெண், ஆகியோரும், கைதடி அரச முதியோர் இல்லத்தில் 

நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 41 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த நிலையில் அதில் ஒருவர் இல்லத்தில் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு வரப்பட்டு 

முன்னெடுக்கப்பட்ட பரிசோநனையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலம் மந்திகை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு 

அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது. உடுவிலில் 74 வயதுடைய ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் 

அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259ஆக உயர்வடைந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு