இராணுவ புலனாய்வு பிரிவின் சுற்றிவளைப்பில் 4 பேர் கைது! யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்களாம்..

ஆசிரியர் - Editor I
இராணுவ புலனாய்வு பிரிவின் சுற்றிவளைப்பில் 4 பேர் கைது! யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்களாம்..

கிளிநொச்சி - தர்மபுரம் அழகாபுரி கிராமத்தில் புதையல் தோண்டிய 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய 

குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் வவுனியாவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணம், விசுவமடுப் பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என்று தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து புதையல் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கானர் கருவி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  கைதானவர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு