வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் குடும்பஸ்த்தரை கட்டிவைத்து அடித்து துன்புறுத்தி கொள்ளை! அதிகாலையில் உறவினர்களால் மீட்கப்பட்ட குடும்பஸ்த்தர்..

ஆசிரியர் - Editor I
வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் குடும்பஸ்த்தரை கட்டிவைத்து அடித்து துன்புறுத்தி கொள்ளை! அதிகாலையில் உறவினர்களால் மீட்கப்பட்ட குடும்பஸ்த்தர்..

வங்கி சிற்றுாழியரின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அவரை கட்டிவைத்து அடித்து துன்புறுத்தி வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளது. 

இந்த சம்பவம் மல்லாவியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது, சம்பவம் குறித்து மேலும் தொியவருவதாவது, 

மல்லாவி இலங்கை வங்கி கிழையில் சிற்றூளியராக பணியாற்றும் ஊழியர் ஒருவரின் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரது வீட்டில் தனிமையில் இரவு தங்கிய வேளையில் உந்துருளியில் வந்த கொள்ளையர்கள் வீட்டினை உடைத்து வீட்டிற்குள் புகுந்து 

தாக்கி காயப்படுத்தியதுடன் அவரது கை,கால்களை கட்டிவைத்து விட்டு பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.

இதன்போது காயமடைந்த குடும்பஸ்தர் காலையில் உறவினர்களின் உதவியுடன் மல்லாவி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு