இ.போ.ச - தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கிடையில் அடிதடி..! நடுரோட்டில் பயணிகளுடன் நின்ற பேருந்துகள்..

ஆசிரியர் - Editor I
இ.போ.ச - தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கிடையில் அடிதடி..! நடுரோட்டில் பயணிகளுடன் நின்ற பேருந்துகள்..

நடு வீதியில் பேருந்தை நிறுத்திவிட்டு இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளின் சாரதிகள், நடத்துனர்கள் அடிதடியில் ஈடுபட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் இன்று காலை 06.20 மணியளவில் கரடி போக்கு சந்தியில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது காயமடைந்ததாக தெரிவித்து 

இ.போ.ச பேருந்தின் சாரதி காப்பளர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சம்பவத்தின்போது பயணிகள் பேருந்துகளில் இருந்துள்ளனர். எனினும் அவர்களிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், 

இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு