யாழ்.சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளை எழுமாற்று பி.சி.ஆர் பரிசோதனை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளை எழுமாற்று பி.சி.ஆர் பரிசோதனை! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..

யாழ்.சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் நாளை வியாழக்கிமை சாவகச்சேரி நகர்பகுதியில் எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் நகர்பகுதி வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை போன்றவற்றுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வீதிகளில் நடமாடுவோர் கொரோனாத் தடுப்பூசி ஏற்றியமைக்கான அட்டையுடன் நடமாடுமாறும். 

தடுப்பூசி அட்டை இன்றி காணப்படுவோர் கட்டாயம் எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு