யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 வயதான குழந்தை உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 வயதான குழந்தை உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 வயதான குழந்தை உட்பட 9 பெண்களுக்கும் 8 ஆண்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சேகரிக்கப்பட்ட 43 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. 

இதன்போது 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பெண்கள் - 09 பேர் (3 வயது குழந்தையுடன், 33, 33, 35, 44, 45, 55, 69, 74 வயதுடைய பெண்கள்), ஆண்கள் - 08 பேர் (20, 20, 33, 45, 47, 52, 60, 67 வயது ஆண்கள்)

இவ்வாறு 3 வயது பெண் குழந்தை உட்பட 17 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு