வீதியின் குறுக்கே சுவர் எழுப்பியுள்ள இராணுவம்! பிரதேசசபையின் கோரிக்கை நிராகரிப்பு, சட்டரீதியாக அகற்ற நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
வீதியின் குறுக்கே சுவர் எழுப்பியுள்ள இராணுவம்! பிரதேசசபையின் கோரிக்கை நிராகரிப்பு, சட்டரீதியாக அகற்ற நடவடிக்கை..

கிளிநொச்சி - இரணைமடு சந்தியில் வீதிக்கு குறுக்காக படையினரால் அமைக்கப்பட்டிருக்கும் கட்டுமானத்தை சட்டரீதியாக அகற்றுவதற்கு கரைச்சி பிரதேசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இரணைமடு சந்தியில் விபத்தை உண்டாக்கும் வகையில்  படையினரால் சுவர் ஒன்று சீமெந்தினால் கட்டப்பட்டுள்ள நிலையில் குறித்த சுவரை அகற்றுமாறு கரைச்சி பிரதேசசபையினர் கூறியிருந்தனர். 

ஆனாலும் குறித்த கட்டுமானம் அகற்றப்படாமலே உள்ளது. இந்நிலையில் சட்டரீதியாக அதனை அகற்றுவது தொடர்பாக கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் ஆராய்ந்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு