அரச ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்பட்டமைக்கு வலுக்கும் எதிர்ப்பு! மீள் பரிசீலனை செய்யப்படவேண்டிய தீர்மானம் எனவும் கருத்து..

ஆசிரியர் - Editor I
அரச ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்பட்டமைக்கு வலுக்கும் எதிர்ப்பு! மீள் பரிசீலனை செய்யப்படவேண்டிய தீர்மானம் எனவும் கருத்து..

அரச ஊழியர்களை கடமைக்கு மீள அழைக்கும் தீர்மானம் மீள் பரிசீலணைக்கு உட்படுத்தப்படவேண்டியது. என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

குறித்த தீர்மானத்தின்போது அதிகாரிகள் ஒரு முக்கியமான விடயத்தை கவனத்திற் கொள்ளாமல் விட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான அரச ஊழியர்கள் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை மாத்திரமே செலுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு வேலைக்கு வருபவர்களின் வீட்டில் உள்ளவர்கள் 

தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்களா என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அதனால் எதிர்காலத்தில் நிலமை மாறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு