மாகாணங்களுக்கிடையிலான இ.போ.ச பேருந்து சேவைகள் இன்று தொடக்கம் ஆரம்பம்!

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையிலான இ.போ.ச பேருந்து சேவைகள் இன்று தொடக்கம் ஆரம்பம்!

மாகாணங்களுக்கிடையிலான இ.போ.ச சேவைகள் இன்று தொடக்கம் வழமைக்குக் கொண்டுவர இ.போ.ச தீர்மானித்துள்ளது. 

அனைத்து அரசு துறை ஊழியர்களையும் இன்று முதல் வேலைக்கு அழைக்கும் அரசின் முடிவை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டது.

ஏற்கனவே இருந்த நேர அட்டவணையின்படி, போக்குவரத்து சேவைகள் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகள் பயணிக்க முடியும். அதற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களுக்கு 

எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம முன்னதாக தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு