யாழ்.பருத்தித்துறை கடற்பகுதியில் ஒருவர் கைது! கடற்படை படையினரின் சுற்றிவளைப்பில் சிக்கினார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை கடற்பகுதியில் ஒருவர் கைது! கடற்படை படையினரின் சுற்றிவளைப்பில் சிக்கினார்..

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதியில் சுமார் 109 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பருத்துறை கடல் வழியாக சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று வருவதை அவதானித்த கடற்படையினர் 

அதனை சுற்றி வளைத்தனர்.இதன்போது குறித்த படகில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 

சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் 

காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு