கோப்பாய் பொலிஸார் தொடர்பான அடுத்தடுத்த முறைப்பாடுகள், நடவடிக்கையில் இறங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு!

ஆசிரியர் - Editor I
கோப்பாய் பொலிஸார் தொடர்பான அடுத்தடுத்த முறைப்பாடுகள், நடவடிக்கையில் இறங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு!

கோப்பாய் பொலிஸார் தொடர்பில் கிடைக்கப்பெற்ற 4 முறைப்பாடுகளையும் யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார். 

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் அதிகப்படியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற செய்தி தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் ஒரு வாரத்துக்குள் 4 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றது. நான்கு முறைப்பாடுகளையும் யாழ்.மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் 

விளக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அனுப்பப்பி வைக்கப்படதாக அவர் மேலும் தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு