சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட இளைஞனுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்! சட்டத்தரணி சுகாஷ் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

கோப்பாய் பொலிஸாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞனுக்கு சட்ட உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் மிலேச்சத்தனமானதும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாருடைய  செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு 

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் பல வழிகளிலும் அரங்கேற்றப்படுகின்றன. கோண்டாவிலைச் சேர்ந்த இளைஞன் மீது கோப்பாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை தொடர்பில் 

பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க முன்னர் மறுத்துவிட்டனர். அழுத்தங்கள் காரணமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படும்போது 

குறித்த இளைஞனுக்காக சட்ட உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு