யாழ்.மாவட்டத்தில் மற்றொரு பிரதேச செயலகத்திலும் கொரோனா தொற்று அபாயம்! பெண் ஊழியருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மற்றொரு பிரதேச செயலகத்திலும் கொரோனா தொற்று அபாயம்! பெண் ஊழியருக்கு தொற்று உறுதி..

யாழ்.ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

போதனா வைத்திசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரதேச செயலகத்தின் சமுர்த்தி வங்கியில் பணியாற்றிய பெண் ஊழியரே தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்

 இதனை அடுத்து அவருடைய நெருக்கமாக பழகியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு