இரண்டு கைகளிலும் தடுப்பூசி போட்டார்கள்! சுகாதார பணிப்பாளரின் கருத்துக்கு வயோதிப பெண் ஊடகங்களை சந்தித்து பதிலடி..

ஆசிரியர் - Editor I
இரண்டு கைகளிலும் தடுப்பூசி போட்டார்கள்! சுகாதார பணிப்பாளரின் கருத்துக்கு வயோதிப பெண் ஊடகங்களை சந்தித்து பதிலடி..

யாழ்.பரியோவான் கல்லூரி அமைக்கப்பட்ட தடுப்பூசி மையத்தில் எனக்கு இரண்டு கைகளிலும் ஒரே நாளில் தடுப்பூசி போட்டார்கள் என தடுப்பூசியைப் பெற்ற வயோதிபப் பெண் தெரிவித்தார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை அவரது வீட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே வடமாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்த கருத்து தொடர்பில் தனது குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த நிலையத்தில் தடுப்பூசியைப் பெறுவதற்காக சென்றிருந்தேன். எனக்கு ஒரு கையில் தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் தடுப்பூசியை வழங்கிய பெண் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். 

அவரிடம் நான் இரண்டு தடவைகளுக்கு மேல் நான் எழுந்து செல்லலாமா? என கேட்டேன் அவர் பதிலளக்காமல் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் உரையாடியபடி சென்றார். 

நான் அவ்விடத்திலேயே இருக்க மறுபக்கத்தில் இன்னொரு உத்தியோகத்தர் அம்மா கையை காட்டுங்கள் என்று கூறியபடி இன்னுமோர் தடுப்பூசியை மறுகையில் போட்டார். ஊசி போட்ட சிறு நேரத்தில் 

எனக்கு தலை சுற்றுவதுபோல் உணர்வு ஏற்பட்டது அங்கிருந்த வைத்தியர்களிடம் சொன்னேன் நீங்கள் சற்று அமர்ந்திருந்து விட்டுச் செல்லுங்கள் என பதில் கூறினார்கள். எனது மகளுடன் வீடு செல்லும்போது 

எனக்கு இரண்டு கைகளிலும் ஊசி போடப்பட்டது எனக் கூறினேன் எனது மகள் அவ்வாறு ஊசி போடக் கூடாது எனக்கூறி நடந்த சம்பவத்தை எனது மகனிடம் தெரிவித்தார். தடுப்பூசி ஒன்றா இரண்டா ஏற்றுவது 

என்ற விடயம் எனக்குத் தெரியாது மகனை அழைத்துக்கொண்டு தடுப்பூசி வழங்கப்பட்ட விதம் தொடர்பில் அறிவதற்காக சென்றேன். முதலில் உள்ளே விட மறுத்து விட்டார்கள் பின்னர் வைத்தியரை சந்திக்க அனுமதித்தார்கள் 

நடந்த சம்பவத்தை வைத்தியரிடம் எனது மகன் விவரமாகச் சொன்னார். எங்கள் முன்னிலையில் அங்கு கடமையிலிருந்த வைத்தியர் கையடக்க தொலைபேசிகளை கடமையின்போது பாவிக்காதீர்கள் என அறிவுரை வழங்கினார்.

எனக்கு ஏதேனும் வித்தியாசமான உணர்வுகள் ஏற்பட்டால் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை கூறியதுடன் மறுநாள் எனது வீடு வீடு தேடி வைத்தியர் எனது உடல் நலம் குறித்து பார்வையிட்டுச் சென்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு