நாளை தொடக்கம் மாகாணங்களுக்கடையில் பேருந்து, ரயில் சேவைகள் வழமைக்கு! நாளை கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என தகவல்..

ஆசிரியர் - Editor I
நாளை தொடக்கம் மாகாணங்களுக்கடையில் பேருந்து, ரயில் சேவைகள் வழமைக்கு! நாளை கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என தகவல்..

மாகாணங்களுக்கிடையில் பேருந்து மற்றும் புகைரத சேவைகள் நாளை தொடக்கம் வழமைக்கு திரும்பும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார். 

இதன்படி மாகாணங்களுக்கிடையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படும். 

மேலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மிக இறுக்கமாக பின்பற்றப்படும். இருக்கைகளுக்கு அளவாகவே பயணிகள் ஏற்றப்படுவார்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். 

இதேவேளை மாகாணங்களுக்கிடையில் தற்போது அமுலில் உள்ள கட்டுப்பாடு நாளை தளர்த்தப்படும் என பொலிஸ் தலமையக தகவல்கள் தொிவிக்கின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு