ஆபாச பட வழக்கில் தீவிரமடையும் விசாரணை!! -ஷில்பா ஷெட்டி கைதாக வாய்ப்பு-

ஆசிரியர் - Editor II
ஆபாச பட வழக்கில் தீவிரமடையும் விசாரணை!! -ஷில்பா ஷெட்டி கைதாக வாய்ப்பு-

முன்னணி நடிகைகளில் ஒருவரான ஷில்பா ஷெட்டி மீது வலுவான ஆதாரங்கள் ஏதேனும் சிக்கினால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அவரின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்த வழக்கில் மும்பை பொலிஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் ஆபாசப் படங்களைத் தயாரித்தது நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்து தான் நடந்ததா?, அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிய பொலிஸார் அண்மையில் அவரிடம் விசாரணை நடத்தினர். 

தற்போதைய நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு குற்றமற்றவர் என்ற நற்சான்று வழங்க முடியாது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் கிடைக்குமா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 

இதன் காரணமாக ஷில்பா ஷெட்டி மீது வலுவான ஆதாரங்கள் ஏதேனும் சிக்கினால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு