தடுப்பூசி 2 டோஸ்களையும் பெற்றவர்களுக்கு மட்டும் பேருந்துகளில் பயணிக்க அனுமதி! புதிய நடைமுறை குறித்து ஆராய்வு..

ஆசிரியர் - Editor I
தடுப்பூசி 2 டோஸ்களையும் பெற்றவர்களுக்கு மட்டும் பேருந்துகளில் பயணிக்க அனுமதி! புதிய நடைமுறை குறித்து ஆராய்வு..

தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றவர்களுக்கு மட்டும் தனியார் பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கும் நடைமுறை தொடர்பாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆராய்ந்துவருகின்றது. 

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அதற்குப் பின்னர், 

இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

எனவே, பயணத் தடை தளர்த்தப்படும் பட்சத்தில், இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்களுக்கு மாத்திரமே பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் நோய் பரவுவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு