யாழ்.தீவகம் வேலணையில் கொரோனா அபாயம்! மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவகம் வேலணையில் கொரோனா அபாயம்! மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.தீவகம் வேலணை பகுதியில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலணையைச் சேர்ந்த 126 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று முன்தினம் வேலணை பகுதியில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு