அடுப்பின் அருகில் பெற்றோல் போத்தல் இருப்பதை அறியாததால் நடந்த விபத்து! இரு பிள்ளையின் தாய் 5 நாள் சிகிச்சையின் பின் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
அடுப்பின் அருகில் பெற்றோல் போத்தல் இருப்பதை அறியாததால் நடந்த விபத்து! இரு பிள்ளையின் தாய் 5 நாள் சிகிச்சையின் பின் உயிரிழப்பு..

தீ காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார். 

குறித்த பெண்ணின் கணவர் அடுப்பிற்கு அருகில் பெற்றோல் போத்தலை வைத்த நிலையில் அதனை அறியாத நிலையில் தீ குச்சியை அணைக்காமல் போட்டதால்

தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தொியவந்திருக்கின்றது. மேலும் குறித்த சம்பவம் வடமராட்சி கிழக்கு  கட்டைக்காடு - முள்ளியான் பகுதியில் இடம்பெற்றது. 

சம்பவத்தில் யோ.பாலரஞ்சிதா (வயது32) என்பவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கடந்த 22ஆம் திகதி மதியம் நின்று சமைக்கும் விறகு அடுப்பில் தேநீர் வைப்பதற்கு மண்ணெண்ணைய் ஊற்றி நெருப்பை வைத்துவிட்டு தீக்குச்சியை போட்ட நிலையில்

அடுப்புக்கட்டுக்கு அருகே பெற்றோல் போத்தல் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து சம்பவத்திருக்கின்றது. 

இதன்போது உடம்பில் தீப்பற்றியதால் அவர் கிணற்றுக்குள் பாய்ந்தபோதும் தீ காயங்களுக்குள்ளான பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்

5 நாட்கள் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு