யாழ்.நெடுந்தீவிலிருந்து போதானா வைத்தியசாலைக்கு வந்தபோது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மனைவி, மகனுக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவிலிருந்து போதானா வைத்தியசாலைக்கு வந்தபோது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மனைவி, மகனுக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.நெடுந்தீவு 11ம் வட்டாரத்திலிருந்து சில நாட்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்திருந்தபோது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு வருகைதந்த நெடுந்தீவு வாசிக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அவரின் மனைவி, மகனுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் அவருடன் தொடர்புடையவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு