யாழ்.வரும் பிரதமருக்கு உச்ச பாதுகாப்பு! 10 பேருக்கு மட்டும் அனுமதி, 24 மணி நேரத்திற்குள் பெற்ற அன்டிஜன் பரிசோதனை அறிக்கையுடன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வரும் பிரதமருக்கு உச்ச பாதுகாப்பு! 10 பேருக்கு மட்டும் அனுமதி, 24 மணி நேரத்திற்குள் பெற்ற அன்டிஜன் பரிசோதனை அறிக்கையுடன்..

யாழ்.மாவட்டத்திற்கு எதிர்வரும் 31ம் திகதி மற்றும் 1ம் திகதி ஆகிய இரு தினங்கள் விஜயமாக பிரதமர் வருகைதரவுள்ள நிலையில், 

யாழ்.வருகை தரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு 24 மணித்தியாலத்துக்குள் பெறப்பட்ட 

ஆன்டிஜன் பரிசோதனை கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

மாவட்டத்தில் எதிர்வரும் 31-1ஆம் திகதிகளில் பல்வேறு நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.

இந்நிகழ்வில் பிரதமர் செயலகத்தில் இருந்து வருகைதரும் அதிகாரிகளைத் தவிர அந்தந்த பிரதேசங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் 

ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட10 பேர் மட்டும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறுப்பினர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்படலாம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு