யாழ்.காங்கேசன்துறை - வவுனியா இடையே தினசரி ஒரு புகைரத சேவை! இன்று ஆரம்பம், விபரங்கள் இணைப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை - வவுனியா இடையே தினசரி ஒரு புகைரத சேவை! இன்று ஆரம்பம், விபரங்கள் இணைப்பு..

யாழ்.காங்கேசன்துறை - வவுனியா இடையே தினசரி ஒரு புகைரத சேவை இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

இன்று அதிகாலை 5.15 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து பயணித்த பயணித்த வவுனியாவை காலை 8.07 மணிக்குச் சென்றடைந்தது.

அத்துடன், இன்று மாலை 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கும் என யாழ்.புகைரத நிலையத்தின் 

பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் கூறியுள்ளார். சாதாரண வகுப்பு தொடருந்து சேவையாக நடைபெறும் இதன் கட்டணமாக யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு 60 ரூபாயும் 

மாங்குளத்துக்கு 120 ரூபாயும் வவுனியாவுக்கு 160 ரூபாயும் கட்டணமாக அறவிடப்படுகிறது. என்று அவர் குறிப்பிட்டார்.

தினமும் அதிகாலை 5.15 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்தும் அதிகாலை 5.45 மணிக்கு யாழ்.மத்திய புகைரதர நிலையத்திலிருந்தும் 

நாவற்குழி, கொடிகாமம் நிலையங்களில் தரித்து கிளிநொச்சி புகைரத நிலையத்தைச் சென்றடையும்.காலை 6.53 மணிக்கு கிளிநொச்சியிலிருந்தும்

காலை 7.22 மணிக்கு மாங்குளத்திலிருந்தும் புறப்படும் புகைரதம் காலை 8.07 மணிக்கு வவுனியா புகைரத நிலையத்தைச் சென்றடையும். 

மாலை 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் யாழ்ப்பாணம் ரயில் நிலைய 

பிரதான அதிபர் ரி.பிரதீபன் கூறினார். இதேவேளை, மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை உள்ள நிலையில் 

அரச, தனியார் மற்றும் வங்கி ஊழியர்களின் நலன்கருதி இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு