மீண்டும் அச்சுறுத்தலா? தினசரி கொரோனா மரணம் மீண்டும் 50ஐ கடந்தது..

ஆசிரியர் - Editor I
மீண்டும் அச்சுறுத்தலா? தினசரி கொரோனா மரணம் மீண்டும் 50ஐ கடந்தது..

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மீண்டும் 50ஐ கடந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். 

இதன்படி நேற்றுமுன்தினம் நாட்டில் 52 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். 

அதன்படி, 26 ஆண்களும் மற்றும் 26 பெண்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். 

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 294,333 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 266,665 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு