பயண கட்டுப்பாடுகள் தளர்வின் பின் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு! சுகாதார அமைச்சு கூறுகிறது..

ஆசிரியர் - Editor I
பயண கட்டுப்பாடுகள் தளர்வின் பின் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு! சுகாதார அமைச்சு கூறுகிறது..

பயண கட்டுப்பாடு பகுதியளவில் தளர்த்தப்பட்ட நிலையில் நாட்டில் கொரோனா நோயாளர்கள் மற்றும் இறப்புகள் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

டெல்டா கொரோனா வைரஸானது நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருவதனை சுட்டிக்காட்டியதுடன், வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறும் இராஜாங்க அமைச்சர் மக்களை வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் புதிய கொரோனா வகைகள் உருவாகலாம். அவை சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், எனவே அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டல்களை 

மக்கள் பின்பற்றுவது மிகவும் அவசியம் என வலியுறுத்தியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு