பளை இலங்கை வங்கி கிளைக்கு சென்றுவந்தவர்கள் உங்களை அடையாளப்படுத்துங்கள்! சுகாதார பிரிவினர் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
பளை இலங்கை வங்கி கிளைக்கு சென்றுவந்தவர்கள் உங்களை அடையாளப்படுத்துங்கள்! சுகாதார பிரிவினர் கோரிக்கை..

பளை நகரில் உள்ள இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், குறித்த வங்கிக்கு சென்றுவந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்துமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் மேலும் ஒருவருக்கு 2ம் தடவை பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த 12ம் திகதி தொடக்கம் 20ம் திகதிவரை வங்கியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்தி உதவுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு