5 மாத குழந்தையின் தலையில் விழுந்த தேங்காய்! உயிருக்கு போராடிய குழந்தையை மீட்ட வைத்தியர்கள்..

ஆசிரியர் - Editor I
5 மாத குழந்தையின் தலையில் விழுந்த தேங்காய்! உயிருக்கு போராடிய குழந்தையை மீட்ட வைத்தியர்கள்..

தலையில் தேங்காய் விழுந்த நிலையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தையை வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மூலம் மீட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பிபில பகுதியில் தலையில் தேங்காய் விழுந்ததால் படுகாயமடைந்த 5 மாத பெண் குழந்தை பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. 

இதனையடுத்து அங்கிருந்து கண்டி தேசிய வைத்தியசாலைக்கு குழந்தை உடனடியாக மாற்றப்பட்டிருந்த நிலையில் வைத்தியர்கள் குழந்தையின் தலையில் சத்திர சிகிச்சை நடாத்தி ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு