யாழ்.கொக்குவில் - குளப்பிட்டி பகுதியில் கடைக்கு தீ வைத்த 3 பேர் கைது! கூலிப்படையாக இருக்கலாம் என பொலிஸார் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் - குளப்பிட்டி பகுதியில் கடைக்கு தீ வைத்த 3 பேர் கைது! கூலிப்படையாக இருக்கலாம் என பொலிஸார் தகவல்..

யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வர்த்தக நிலையத்தின் மீது பெற்றோல் போத்தல்களை வீசியதுடன், வாள்வெட்டு தாக்குதல் நடாத்த முயற்சித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள், வாள் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளது. 

கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் புடவை கடை ஒன்றுக்கு பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் மூலம் தீ மூட்டப்பட்டது. இந்த சம்பவம் இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வாள்கள் மற்றும் பெற்றோல் குண்டு சகிதம் கடைக்குள் புகுந்து இந்த நாசகார செயலைச் செய்துள்ளனர். இதன்போது கடையில் இருந்த புடவைகள் மற்றும் நேற்று கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புடவைகள் 

உட்பட பல லட்சம் ரூபாய் சொத்து தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் கைக்கூலிகள் மூலம் வைத்து செய்யப்பட்டிருக்கலாம் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கடைக்கும் எதிரில் இன்னொரு புடவைக்கடை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தீ மூட்டப்பட்ட கடை உரிமையாளர் குறைந்த விலைக்கு பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் 

எதிர்க் கடை வியாபாரியுடன் மனஸ்தாபம் ஒன்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளை யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு