எழுமாற்று அன்டிஜன் பரிசோதனைகளில் சிக்கும் கொரோனா தொற்றாளர்கள்! பொதுச்சந்தையில் 7 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
எழுமாற்று அன்டிஜன் பரிசோதனைகளில் சிக்கும் கொரோனா தொற்றாளர்கள்! பொதுச்சந்தையில் 7 பேருக்கு தொற்று உறுதி..

கிளிநொச்சி பொதுச்சந்தையில் நேற்றுமுன்தினமும், நேற்றும் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

நேற்று முன்தினம் 317 பேருக்கும், நேற்றய தினம் 150 பேருக்கும் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. இதன்போது 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சேவை சந்தையினை தொடர்ந்தும் திறந்து விடுவது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினர் சுகாதார தரப்புடன் பேசி வருகின்றனர்சேவை சந்தையில் சேவை பெறுவோர்

சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு சுகாதார தரப்பினர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.தொற்றுக்குள்ளானவர்கள் சேவை சந்தையில் வர்த்தக நடவடிக்கையில் 

ஈடுபட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு