கருங்கற்களால் மறைத்து 8 லட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கடத்தல்!!

ஆசிரியர் - Admin
கருங்கற்களால் மறைத்து 8 லட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் கடத்தல்!!

சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 8 லட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள்பூநகரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இலுப்பக்கடவையில் இருந்து ரிப்பர் வாகனத்தில் கருங்கற்களால் மறைத்து மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக பொலிஸாரால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு அமைவாக இன்று (21) அதிகாலை சங்குபிட்டி பாலத்தருகில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் வைத்து குறித்த ரிப்பர் வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

குறித்த ரிப்பர் வாகனத்தில் கருங்கற்களால் சூட்சுமமாக மறைத்து மரக்குற்றிகள் எடுத்து செல்லப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த ரிப்பர் வாகனமும் சாரதியும் கைது செய்யப்பட்டு பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மரக்குற்றிகள் யாழ்ப்பாணம் எடுத்து செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும், 24 மரக்குத்திகளும் 8 லட்சத்துக்கு அதிக பெறுமதி கொண்டது எனவும் பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் பொலிஸாரால் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு