பணி நீக்கப்பட்ட இ.போ.ச பேருந்து நடத்துனர்களுக்கு ஒரு வருட சம்பளம் வட்டியுடன்...

ஆசிரியர் - Editor I
பணி நீக்கப்பட்ட இ.போ.ச பேருந்து நடத்துனர்களுக்கு ஒரு வருட சம்பளம் வட்டியுடன்...

வடபிராந்திய இ.போ.சபையில் கடமையின்போது முறைகேடாக செயற்றட்டார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு பணி நீக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் மீள வும் சேபையில் இணைத்து கொள்ளப்பட்ட 5 இ.போ.ச பேருந்து நடத்துனர்களுக்கு ஒரு வருட சம்பள நிலுவை வட்டியுடன் வழங்கப்படவுள்ளது. 

வடபிராந்திய போக்குவரத்துச் சபை உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டுக்குச் செல்லாவிடின் இந்த இழப்பீட்டுப் பணம் அவர்கள் 5 பேரும் கிடைக்கும் என அறிய முடிகிறது.

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகளில் பணியாற்றும் நடத்துனர்கள் 6 பேர் கடமையின் போது வழி பரிசோதகர் சோதனையின் போது  முறைகேடாகச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் - மன்னார் சேவைக்கு பயணி ஒருவரிடம் 6 ரூபா 50 சதத்துக்கு கட்டணச் சீட்டு வழங்கியமை (நியம கட்டணத் தொகைக்கு குறைவான கட்டணத்தை அறவிட்டமை) பணத்தைப் பெற்றுக்கொண்டு கட்டணச் சீட்டு வழங்காமை கட்டணச் சீட்டுகளில் குறிக்கப்பட்ட பணத்தின் தொகைக்கும் கையில் வைத்திருந்த பணம் மீதிக்கும் இடையே குறை அல்லது அதிகம் காணப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்கள் 6 பேருக்கும் நிர்வாக ஒழுக்காற்று குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டது.

அது தொடர்பில் நடைபெற்ற ஒழுக்காற்று நடவடிக்கையின் போது அவர்கள் மீதான விசாரணையின் பின்னர் 6 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தமக்கு மீள பணி வழங்கப்பட வேண்டும் எனவும்இ இழப்பீடு  மற்றும் சம்பள நிலுவையை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி யாழ்ப்பாணம் தொழில் நியாய சபையில் நடத்துனர்கள் 6 பேரும் வழக்கு தாக்கல் செய்தனர்.

விசாரணைகளின் பின்னர் 5 நடத்துனர்களது விண்ணப்பங்களையும் ஏற்ற தொழில் நியாய சபை அவர்களுக்கு சார்பான தீர்ப்பொன்றை வழங்கியது. 

தொழில் நியாய சபையின் தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து பிரதிவாதியான வட பிராந்திய போக்குவரத்து சபை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்  6 பேரையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு மேன்முறையீட்டு மனு தனித்தனியே தாக்கல் செய்தது.

மேன்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட தொழில் நியாய சபை 6 பேரின் 12 மாதங்கள் சம்பளக் கொடுப்பனவை வைப்பிலிடுமாறு சட்ட ஏற்பாடுகளின் படி மேன்முறையீட்டு மனுதாரரான வடபிராந்திய போக்குவரத்து சபைக்கு உத்தரவிட்டடது.

அந்தப் பணத்தை 6 பேர் சார்பிலும் வடபிராந்திய போக்குவரத்துச் சபையால் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபையில் வைப்புச் செய்தது. அந்தப் பணம் தொழில் நியாய சபைச் சட்டத்துக்கு அமைய 6 மனு தாரர்கள் சார்பிலும் வங்கியில் வைப்பிலிடப்பட்டது.

இந்த நிலையில் மேன்முறையீட்டு மனுக்களில் 5 மனுக்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று கடந்த வாரம் கட்டளை வழங்கியது.

தொழில் நியாய சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பை திருத்தங்களுடன் மன்று உறுதி செய்கிறது” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட 5 நடத்துனர்களையும் சம்பள நிலுவை மற்றும் இழப்பீடு வழங்கப்படவேண்டியதில்லை எனச் சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்றுஇ அவர்களின் சேவைக் காலத்தை முறிவின்றி அனுமதிக்குமாறு கட்டளையிட்டிருந்தது.

இந்த நிலையில் மேன்முறையீட்டு மனு தாரரான வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் மனு மேல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டதால்இ மேன்முறையீட்டுக்கான வைப்புப் பணம் பிரதிவாதிகளான நடத்துனர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

தொழில் நியாய சபை சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் நடத்துனர்கள் 5 பேருக்கும் 12 மாத சம்பளத்துடன் மேன்முறையீட்டு மனு மீதான கட்டளை வழங்கப்பட்ட காலம் வரையான வட்டியுடன் பணம் கிடைக்கவுள்ளது.

எனினும் வடபிராந்திய போக்குவரத்துச் சபை உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யுமாயின் அந்தப் பணம் உயர் நீதிமன்றின் கட்டளை கிடைக்கும்வரை வைப்பிலிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு