யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை உயிரிழப்பு..!

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 மாதங்களான குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

முழங்காவில் - குமுழமுனை கிராமத்தை சேர்ந்த ரஞ்சீவன் தனுசியன் என்ற 4 மாத குழுந்தையே உயிரிழந்துள்ளது. கடந்த 18ம் திகதி குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்படடிருந்த நிலையில், 

தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். பின்னர் நேற்றுமுன்தினம் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்றய தினம் உயிரிழந்துள்ளது. மரண விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலையின்

திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு