திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்த ஜனாதிபதி இணங்கியுள்ளார்...VIDEO

ஆசிரியர் - Editor I
திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்த ஜனாதிபதி இணங்கியுள்ளார்...VIDEO

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் கடந்த மாகாணசபை அமர்வில் மேற்படி சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவற்றப்பட்டுள்ளமை தொடர்பாகவும், 

மாகாணசபை உறுப்பினர்கள் 38 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு செல்லவுள்ளமை தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் n தாடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தன் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இதன்போது மகாவலி அதிகாரசபையின் அமைச்சராக உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மேற்படி திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் திங்கள் கிழமை நடைபெறவி ருந்த மகாவலி அதிகாரசபையின் கூட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கும் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு