நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம்! பொதுமக்களுக்கு பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம்! பொதுமக்களுக்கு பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள எச்சரிக்கை..

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் நடமாடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, கொழும்பின் பல்வேறு சன நெரிசல் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசமின்றி நடமாடுவதாக புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகக்கவசமின்றி பொதுவெளியில் நடமாடுவது தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் குற்றமாகும். அந்த குற்றங்கள் நிரூபிக்கப்படும் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

எனவே முகக்கவசம் அணியாது சன நெரிசல் மற்றும் பொதுவெளியில் நடமாடுபவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு