வடகிழக்கு மாகாணங்களில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் 2 மாதங்களுக்குள் தடுப்பூசி! நாமலுடனான சந்திப்பின் பின் ஜனாதிபதி பணிப்பு..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு மாகாணங்களில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் 2 மாதங்களுக்குள் தடுப்பூசி! நாமலுடனான சந்திப்பின் பின் ஜனாதிபதி பணிப்பு..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தடுப்பூசி வழங்கும் சிறப்பு திட்டம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுக்கும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது வடகிழக்கு மாகாணங்களில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும்  2 மாத காலப்பகுதிக்குள் தடுப்பூசி வழங்கும் பிரத்தியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் வடகிழக்கு மாகாணங்களின் மக்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதை அடுத்து 

இந்த பிரத்தியேகத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்படி திட்டத்தின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் 

கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளை ஜனாதிபதி பணித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு