சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 21 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று! சிறுவர் இல்லம் முடக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 21 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று! சிறுவர் இல்லம் முடக்கப்பட்டது..

மட்டக்களப்பு - களுதாவளை பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த 21 சிறுவர்கள் உட்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் சிறுவர் இல்லத்தை உடனடியாக முடக்குவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்திருப்பதாக தொிவிக்கப்படுகின்றது. 

இல்லத்தில் உள்ள மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சென்றபோது 

அங்கு சில மாணவர்களுக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏனைய சிறுவர்களுக்கும் அங்கு கடமையாற்றுபவர்களுக்கும் 

அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு 19 பேருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் மேலும் மூவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் சிறுவர் இல்லம் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர்கள் இல்லத்திலிருந்த 21 சிறுவர்களும் ஒரு விடுதி காப்பாளருமான 22பேர் கொரனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் 

ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவு தொிவித்துள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு