வீடு புகுந்து வாள்வெட்டு நடத்தியவர்களை அடையாளம் காட்டியும் கைது செய்ய தயங்கும் பொலிஸார்! சமாதானம் பேசுகிறதாம் வாள்வெட்டு குழு..

ஆசிரியர் - Editor I
வீடு புகுந்து வாள்வெட்டு நடத்தியவர்களை அடையாளம் காட்டியும் கைது செய்ய தயங்கும் பொலிஸார்! சமாதானம் பேசுகிறதாம் வாள்வெட்டு குழு..

வீட்டுக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்டியும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். 

இது குறித்து மேலும் அவர்கள் கூறியுள்ளதாவது, கடந்த 3 நாட்களுக்கு முன்னர் முகமாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு, 

வீட்டிலிருந்த குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன், வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கி சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றிருந்தது. 

இந்நிலையில் காயமடைந்த குடும்பஸ்த்தர் தன் மீது தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காட்டியிருந்தபோதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இதற்கிடையில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கு சென்று சமாதானமாக போவோம் என

தொடர்ந்து சமாதானம் பேசுவதாகவும் ஏற்கனவே நடந்த சம்பவத்திற்கு ஒரு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மீளவும் முறைப்பாடு செய்து 

பயனில்லை என்பதால் அமைதியாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் மேலும் கூறியிருக்கின்றனர். 

இந்நிலையில் பொலிஸாரிடம் இது குறித்து கேட்டபோது சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு