விபத்தில் படுகாயமடைந்த பருத்தித்துறையை சேர்ந்த சமூக சேவகரும், அரச ஊழியருமான இளைஞன் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
விபத்தில் படுகாயமடைந்த பருத்தித்துறையை சேர்ந்த சமூக சேவகரும், அரச ஊழியருமான இளைஞன் உயிரிழப்பு..!

மன்னார் - பூநகரி வீதியில் முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.

அரச உத்தியேகத்தரும் கணபதி அறக்கட்டளை அமைப்பின் மன்னார் மாவட்ட பொறுப்பாளருமான சமூக சேவையாளர் உயிரிழந்துள்ள சம்பவம் 

அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வடமராட்சி வியாபாரிமூலையைச் சேர்ந்த வைரவநாதன் யசோதரன் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் அரச துறையில் பணிபுரிந்து வரும் குறித்த உத்தியோகத்தர் பணிபுரிந்து விட்டு வீடு நோக்கி பயணித்தபோது மன்னார் முழங்காவில் பகுதியில் 

இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இருப்பினும் நேற்று மாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.இவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு