மன்னாரில் பைசர் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

ஆசிரியர் - Admin
மன்னாரில் பைசர் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

மன்னார் மாவட்டத்திற்கு 20 ஆயிரம் "பைசர்" தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் இன்று 'பைசர்' தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைமன்னார் பியர் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் தலைமன்னார் புனித லோறன்சியா ஆலய வளாகம் போன்ற இடங்களில் இன்று காலை 10 மணிமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதல் கட்டமாக தலைமன்னாரில் 5 கிராம அலுவலகர் பிரிவுகளில் வாழும் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாளைய தினம் (10) பேசாலை, வங்காலை, முத்தரிப்புத்துறை, மடு ஆகிய பகுதிகளில் குறித்த தடுப்பூசிகள் செலுத்தும் பணி இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு