முல்லைத்தீவு வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலும் 3 பேர் யாழ்ப்பாணத்தில் கைது! தாக்குதலுக்கு சுவிஸிலிருந்து அனுப்பபட்ட பணம்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலும் 3 பேர் யாழ்ப்பாணத்தில் கைது! தாக்குதலுக்கு சுவிஸிலிருந்து அனுப்பபட்ட பணம்..

முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் வீடொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து ஆவா குழுவை சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி தாக்குதலை நடத்தியுள்ளதாக சந்தேகநபர்கள் விசாரணையில் கூறியுள்ளதாக பொலிஸார் கூறினர். 

நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 27ஆம் திகதி கள்ளப்பாட்டுப்பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர் மீது 

வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்கள் இரண்டு மீது தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றிருந்தது.சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் 

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நவாலியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் ஆறு பேரும் 

சம்பவம் தொடர்பில் ஒப்புக்கொண்டனர். சந்தேக நபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள், வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.சந்தேக நபர்கள் 6 பேரும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் 

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நேற்றிரவு முற்படுத்தப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு