படுகொலைக்கு நீதிகேட்டு போராடிய 16 பேர் கைது! அன்டிஜன் பரிசோதனை செய்யபோவதாக கூறும் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
படுகொலைக்கு நீதிகேட்டு போராடிய 16 பேர் கைது! அன்டிஜன் பரிசோதனை செய்யபோவதாக கூறும் பொலிஸார்..

அமைச்சர் வியாழேந்திரன் வீட்டு வாயிலில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பில் நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் நடத்திய கொல்லப்பட்டவரின் உறவினர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த மாதம் 21 ம் திகதி அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் தொடர்பாக அமைச்சரின் அமய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் உயிரிழந்தவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஒன்றினைந்து 

நீதி கோரி காந்தி பூங்காவிற்கு முன்னால் கவனயீர்புபோராட்டமொன்றை முன்னெடுப்பதற்காக பஸ்வண்டி ஒன்றில் மட்டக்களப்பு நகரப்பகுதிக்குவந்தவேளை இளைஞர்களும் அவர்களுடன் இணைந்துகொண்டனர்.

இதனையடுத்து அந்த பகுதிக்கு பொலிசார் புலனாய்வு பிரிவினர் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபடவந்தவர்களை அங்கிருந்து எச்சரித்து எந்த விதமான ஆர்ப்பாட்டங்களே ஓன்று கூடலையே செயவதற்கு 

அரசாங்கம் தடைவிதித்திருப்பதாக தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பினர் அதேவேளை பஸ்வண்டியில் வந்தவர்கள் அங்கிருந்து விலகி சென்ற நிலையில் அவர்களை பொலிசார் பின் தொடர்ந்து 

அந்த பஸ்வண்டியிலுள்ளவர்களுடன் பஸ்வண்டியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு தடுத்துவைத்து அதில் இருந்த துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் தந்தை தாயார் உட்பட 16 பேரை கைது செய்துள்ளனர் 

இந்த நிலையில் பொலிஸ் நிலையத்துக்கு ஊடகவியலாளர் செல்வதற்கு பொலிசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையான அன்டிஜன் பரிசோதனைகளை 

மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு